உள்ளூர் செய்திகள்

இனிய சொல் பேசுங்கள்

* நிலையில்லாத செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே அனைத்தையும் நிறைவாக அளிக்கும், கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும்.* எல்லோருக்கும் கடவுளும் தந்தையும்ஆனவர் ஒருவரே. அவர் அனைவருக்கும் மேலானவர். அவர் அனைவர் மூலமாகவும் செயலாற்றுவதுடன் அனைவருக்குள்ளும் இருக்கிறார்.* இறைவன் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல், நீங்களும் பிறரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும்.* ஞானமும் அறிவும் உனக்கு இனிமையாய் இருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன் கிடைக்கும். உன் நம்பிக்கையும் வீண்போகாது.* இனிய சொற்கள் தேன்கூடு போன்றவை. மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கும் நலம் தருபவையாகும்.*மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை சிந்தனை செய்வதுமில்லை.- பைபிள்