உழைத்து வாழ்வதே நோக்கம்
* ஒரு காலத்தில் இருளாக இருந்த நீங்கள் இப்போது கடவுளோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.* ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலும், ஒளியைப் போலும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்து விண்மீன்களைப் போல ஒளி வீசித் திகழ்வர்.* கடவுள் இரு ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் உருவாக்கினார்.* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை, சிந்தனை செய்வதுமில்லை.* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.* 'இருளிலிருந்து ஒளித்தோன்றுக' என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.- பைபிள்