கடவுளிடம் நம்பிக்கை கொள்
UPDATED : மார் 15, 2012 | ADDED : மார் 15, 2012
* நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.* வாழ்க்கையில் மனிதனிடம் அந்தரங்க நம்பிக்கை வைப்பதைவிடக் கடவுளிடம் நம்பிக்கை வைத்திருப்பதே நல்லது.* துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது.* இப்பொழுது நிலைபெற்றிருப்பவை: விசுவாசம், நம்பிக்கை, தர்மம். இம்மூன்றினுள் மகத்தானது தர்மமே ஆகும்.* அடங்காதவர்களை எச்சரியுங்கள். பலவீன மனம் படைத்தவர்களைத் தேற்றுங்கள். எளியவர்களை ஆதரியுங்கள். அனைத்து மனிதர்களிடமும் பொறுமையாய் இருங்கள்.* ஜெபம் செய்யும் போது வேடதாரிகள் போல் விளங்க வேண்டாம். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெப ஆலயங்களிலும், முச்சந்தியிலும் நின்று ஜெபம் செய்ய விரும்புகிறார்கள்.-பைபிள் பொன்மொழிகள்