தர்மத்திற்கு எதற்கு தம்பட்டம்?
* கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறுவராதபடி காத்துக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவமும் இளைமையும் மறையக் கூடியதே.* இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர். வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர்.* வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழி நடத்திச் செல்லும் கடவுள், அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.* தந்தையைக் கொடுமைப்படுத்தி, தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக் கேட்டையும் இழிவையும் வருவித்துக் கொள்வான்.* அடிமையை இளமைப் பருவம் முதல் இளக்காரம் காட்டி வளர்த்தால், அவர் பிற்காலத்தில் நன்றி கெட்டவராவார்.* நீ இளவயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு. தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவர் பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு.* நீங்கள் தர்மம் செய்யும் போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்.-பைபிள்