உள்ளூர் செய்திகள்

நன்மையால் வெல்லுங்கள்

* நீதிமானுக்குக் கடவுளின் வேதம் அவனது இருதயத்திற்குள் இருக்கிறது. அவனுடைய நடைகளில் எதுவும் தவறுவதில்லை.* தீமை உன்னை வெற்றி கொள்ள விடாதே. ஆனால், தீமையை நன்மையால் வெற்றி கொள்.* படுகுழி தோண்டுபவன் அதற்குள் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிக்கப்படுவான்.* புத்திசாலியான பெண் தன் வீட்டைக் கட்டுவாள். புத்தியில்லாதவளோ அதைத் தன் கையாலே பிடுங்கிஎறிவாள்.* நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்காது. கெட்டமரம் நல்ல கனிகளைத் தராது.* தீமைகள் என்பது மூடனுக்கு ஒரு விளையாட்டு. தீமைகள் புரிவது அறிவுணர்ச்சியுள்ளவனுக்கோ ஞானம்.* சிலரின் பாவச் செயல்கள் விசாரணைக்குப் போகும் முன்பே வெளியாகி விடுகின்றன. மற்றும் சிலருடையதோ விசாரணைக்குப் பிறகுதான் பின் தொடர்கின்றன.- பைபிள் பொன்மொழிகள்