நமக்குத் தேவையான விளக்கு
UPDATED : பிப் 21, 2012 | ADDED : பிப் 21, 2012
* ராமபக்தியுடன் வாழ்பவர்கள் பரிசுத்தம், மகிழ்ச்சி பெற்று இம்மையிலும் மறுமையிலும் மேன்மை அடைவார்கள்.* ராமபக்தியுடையவருக்கு ஞானம், வைராக்கியம் தாமாக உண்டாகும். பாவத்திலிருந்து விடுபட்டு வாழ்வர். * பார்வை இருந்தாலும், இருளில் நடக்க விளக்கு தேவைப்படுகிறது. அதுபோல நமக்கு அறிவு இருந்தாலும், சரியான வழிகாட்ட ராமபக்தி என்ற ஒளிவிளக்கு தேவை.* அதிர்ஷ்டம் வந்தால் ஆனந்தக்கூத்தாடுவதும், துன்பம் வந்தால் துவண்டு போவதும் கூடாது. எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.* சத்தியம் தான் நமக்கு உற்ற துணை. எப்போதும். உற்சாகத்தை இழக்கக் கூடாது. பிறப்பும், இறப்பும் உலகின் இயற்கை என்பதை உணர்ந்து பணிவோடு நடக்க வேண்டும்.* உடலையும், உள்ளத்தையும் தூய்மையான நிலையில் வைத்து, பக்தி சிரத்தையுடன் சேவை செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்வதில் தயக்கம் கூடாது.- ராமாயணம்