எல்லாம் உயர்வானதே!
UPDATED : டிச 01, 2014 | ADDED : டிச 01, 2014
* உன்னுடைய ஒவ்வொரு செயலும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாக இருக்கட்டும்.* பிறருக்கு செய்யும் பொதுநலம் மூலம் உனக்கே நன்மை செய்து கொள்கிறாய்.* அடிக்கவும், அணைக்கவும் தெரிந்த விவேகமுள்ள சிறந்த நண்பன் கடவுள் மட்டுமே.* உன் கண்களுக்கு அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.* பயனற்ற கற்பனையை விட்டொழி. உலகம் எப்படிப்பட்டது என்பதை கண்களைத் திறந்து பார்.* விவேகமுள்ள சிறந்த நண்பன் இறைவன் ஒருவனே.- அரவிந்தர்