உள்ளூர் செய்திகள்

இன்பமே வாழ்வின் ரகசியம்

<P>* உன்னைக் கடவுள் நேசிக்கும்படி செய்ய உன்னால் முடியவில்லை என்றால் அவரை உன்னுடன் போரிடவாவது செய்ய வை. <BR>* உன் மனதை வேண்டுமானால் நீ சந்தேகித்துக் கொள். ஆனால், கடவுள் உன்னை வழிநடத்துகிறார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.<BR>* அடிப்படையிலேயே ஒருவரிடம் நேர்மை எண்ணமும், குணமும் வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஆன்மிக வாழ்வை விட்டுவிடுதல் வேண்டும். ஏனென்றால் ஆன்மிகத்திற்கு நேர்மை அடிப்படையான குணமாகும். <BR>* இன்பமே வாழ்வின் ரகசியம். கடவுளை அறிந்தால் தூய்மையான இன்பத்தை அறிந்தவனாகிறாய். <BR>* மனத்திட்பமும், சிந்தனையும், உழைப்பும் வாழ்வின் மிகச் சக்திவாய்ந்த சாதனங்களாகும். வம்பளக்கும் குணம் நம் சாதனைகளுக்குத் தடைக்கல்லாகும். <BR>* முதலில் நீ யார் என்று புரிந்து கொள். பின்னர் உன் செயல்பாட்டைத் தொடங்கு. <BR>* நீ உன்னை ஒரு பக்கம் இறைவனது உண்மைக்குத் திறந்து கொண்டு, மற்றொரு பக்கம் பகைச்சக்திகளுக்குக் கதவு திறந்து கொண்டே இருந்தால் இறையருள் உன்னிடம் தங்கும் என்று எதிர்ப்பார்ப்பது வீணாகும்.<BR>* உனது நேர்மையும், சரணமும் முழுமையானதாகவும், உண்மையானதாகவும் இருக்கட்டும். உன்னை இறைவனுக்குக் கொடுக்கும்போது கோரிக்கை, நிபந்தனை, பிடித்தம் ஏதுமின்றி முற்றிலுமாகக் கொடுத்துவிடு.<BR><STRONG>அரவிந்தர்</STRONG></P>