பெருந்தன்மை வேண்டும்
UPDATED : பிப் 27, 2014 | ADDED : பிப் 27, 2014
* செல்வத்தால் பெருமைப்பட்டுக் கொள்ளாதே. புகழ்ச்சியைக் கண்டு மயங்காதே.* புண்படுத்தியவர்களையும் மன்னிப்பதே பெருந்தன்மை. ஆனால், அது அவள்ளவு எளிதில் யாருக்கும் வந்து விடுவதில்லை.* பெருந்தன்மை இல்லாத மனிதன் இருட்டறையில் உழலும் பூச்சிக்குச் சமமானவன்.* தோல்வி என்பதே கிடையாது. இலக்கை நோக்கிய பயணத்தில், கொஞ்சம் சுற்றி வளைத்துச் செல்வதாகவே பொருள்.* கடவுள் பக்தியும், மனித நேயமும் ஞானத்தை அடைவதற்கான படிக்கட்டுகள்.அரவிந்தர்