தெய்வம் தரும் பலன்
UPDATED : அக் 12, 2015 | ADDED : அக் 12, 2015
* தெய்வத்திடம் செய்யும் முறையீடு வீண் போவதில்லை. என்றாவது ஒருநாள் பலன் கிடைத்தே தீரும்.* சிறிய லட்சியத்தில் வெற்றி பெறுவதை விட, பெரிய லட்சியத்திற்காக முயன்று தோல்வி பெறுவது மேலானது.* மனதை கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால் வாழ்வில் அமைதியும், இனிமையும் உண்டாகி விடும்.* முன்னேறுவதற்காகவே நீ பிறந்திருக்கிறாய். அதற்காக நீ கற்க வேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கிறது.*மவுனத்தில் தீங்கு இல்லை. பேசினால் பத்தில் ஒன்பது முறை, நீ உன் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறாய்.- ஸ்ரீஅன்னை