உள்ளூர் செய்திகள்

முழுமையாக நம்பு

* உலக இன்பத்தை எல்லாம் அனுபவித்து மகிழ்வது போல, அதை விட்டு விடவும் தயாராக இருக்க வேண்டும்.* கடவுளை நெருங்க வேண்டுமானால் மனதிலுள்ள எல்லா விருப்பங்களையும் புறக்கணிக்க வேண்டியது அவசியம்.* ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி பெற விரும்பினால், உங்களையே கடவுளிடம் ஒப்படைத்து விடுங்கள்.* மனநிலையைப் பொறுத்தே மனிதனின் புறத்தோற்றம் அமைகிறது. முகமே குணம் காட்டும் கண்ணாடி.* நம்பிக்கை முழுமையானதாக இருந்தால் மட்டுமே, எந்த முயற்சியிலும் ஈடுபட்டு சாதிக்க முடியும்.ஸ்ரீஅன்னை