வளர்ச்சிக்கு என்ன வழி
UPDATED : ஜூன் 15, 2015 | ADDED : ஜூன் 15, 2015
* சாந்தம், சகிப்புத் தன்மை, நிதானம் ஆகிய நற்குணம் உங்களின் இயல்பாகட்டும். * தொண்டில் எப்போதும் ஈடுபடுங்கள். அதை விட சிறந்த மகிழ்ச்சி வேறில்லை.*அன்பு எதையும் எதிர்பார்ப்பது இல்லை. தன்னையே பிறருக்குக் கொடுக்கும். * கடவுளைச் சரணடைவதால் நாம் ஏதும் குறையப் போவதில்லை. மாறாக வளரவே செய்கிறோம். * எந்த சூழ்நிலையிலும் சந்தோஷத்தை இழக்காதீர்கள். எதிலும் தீமையைக் காண முயலாதீர்கள். * கடவுளின் உதவி நமக்கு இருக்கிறது. அதற்கான தகுதி நமக்கு இருக்கிறதா என்பது தான் முக்கியம்.-ஸ்ரீ அன்னை