உள்ளூர் செய்திகள்

நன்றி மறப்பது நன்றன்று!

* தக்க சமயத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும், பயன் கருதாமல் செய்யும்போது அதன் மதிப்பு இந்த உலகத்தை விட பெரியது.* நெறிமுறைகளைப் பின்பற்றி நல்ல முறையில் வாழ்பவன் கடவுள் நிலையில் வைத்து வணங்கப்படுவான். * அன்பை யாராலும் மறைக்க முடியாது. வேண்டியவர்களின் துன்பத்தைக் கண்டவுடன், அது தானாக வெளிப்பட்டு விடும்.* சொல்வது யாருக்கும் எளிதான விஷயம். சொன்ன வாக்கை காப்பாற்றுவது அரிதானது. * ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல. ஆனால், அவர் செய்த தீமையை உடனே மறந்து விட வேண்டும்.* நமக்கு அழிவு வராமல் காக்கும் கருவி அறிவு. பகைவர்களிடம் இருந்து காக்கும் அரணாக அது விளங்கும். * பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய தீயபண்புகள் நம்மைச் சேராதபடி வாழ்வு நடத்த வேண்டும்.- திருவள்ளுவர்