உள்ளூர் செய்திகள்

நியாயத்திற்கு கட்டுப்படுங்கள்

 * பற்றற்றவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். உள்ளப்பற்றுகளை எல்லாம் துறந்துவிடுவதற்கு அப்பற்றைப்பற்ற வேண்டும்.* கடவுளை நிச்சயமாகக் காணமுடியும். அதற்குத் தேவை நம்பிக்கை. பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்யக்கூடாது. உழைப்பிற்காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே பரவ வேண்டும்.* மக்கள் அனைவருமே நாராயணர்களே என்பதை அனுபவம் மூலம் உணர்ந்து கொள்வது தான் ஆன்மிகம். * உலகம் முழுவதும் அச்சம் மண்டியிருப்பதற்குக் காரணம் அனைவரின் உள்ளங்களிலும் பயம் புகுந்துள்ளது.* மக்களுக்கு நியாயத்தை உணர்த்துதல், அவர்களை நியாயத்திற்கு கட்டுப்படச் செய்தல் சத்தியாகிரகத்தின் ஓர் அங்கமாகும்.* பகவத்கீதை மற்றும் பாகவதத்தில் கூறியபடி, பக்தர்களான சாது- மகாத்மாக்கள் அனுஷ்டித்துக் காட்டிய பக்தி தருமமே பக்தி மார்க்கம்.-வினோபாஜி