உள்ளூர் செய்திகள்

கணக்கு கேட்கப்படும்

* உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்தினாலும், மறைத்து வைத்தாலும் இறைவன் அவை பற்றி கணக்குக் கேட்பான். * மறுமை நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விருந்தினரை உபசரிக்கட்டும். * ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடி ஆவார். எனவே சகோதரர் துன்பத்தில் இருந்தால் அதை நீக்குங்கள்.* மனிதன் செய்யும் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாக்கில் இருந்தே பிறக்கின்றன. * கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகிய மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும். * நல்ல செயல்களைத் தவிர வேறு எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.* நீங்கள் வைத்த மரத்தில் உள்ள பழங்களை பறவைகள் சாப்பிட்டாலும், தர்மம் செய்துவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம். * ஒரு சாண் நிலத்தை அநியாயமாக அபகரிப்பவன் மறுமை நாளில் ஏழு பூமிக்கடியில் அழுத்தப்படுவான்.