நோய் குறித்து கவலை வேண்டாம்
UPDATED : ஜன 19, 2024 | ADDED : ஜன 19, 2024
* நோயைக் கொடுத்தவன் அதனை நீக்குவதற்கு நிச்சயமாக மருந்தையும் படைத்து தயாராக வைத்துள்ளான். * நோய் என்பது இறைவனின் சோதனையாகும். அதைக் கொண்டு அடியார்களை பரிசுத்தப்படுத்துகிறான். * ஒருவன் நோயாளியாகிவிட்டால் நற்செயலை பதிவு செய்யும் வானவருக்கு, 'இவன் முன்பு சுகமாக இருந்த போது செய்த நற்செயல்களின் நன்மை இப்போதும் கிடைக்கட்டும்' என கட்டளை பிறக்கும். * எவரேனும் ஒருவர் நோயாளியை சந்திக்கச் செல்வாராயின், ஒரு அழைப்பாளர் வானத்தில் இருந்து குரல் கொடுப்பார். 'நீங்கள் நல்லவர். உமது நடையும் நல்லது. சொர்க்கப்பதியில் ஒரு வீட்டைச் சம்பாதித்துக் கொண்டீர்' என்பதுதான் அது. * நோயாளியிடம் துஆ (பிரார்த்தனை) செய்ய வேண்டுவீர். * மது அருந்துபவர்கள் நோயாளியாகி விட்டால் அவர்களை நலம் விசாரிக்க செல்லாதீர்கள்.