உள்ளூர் செய்திகள்

இதுவும் தர்மமே

* இறைத்த தண்ணீரை உன்னுடைய வாளியில் இருந்து, உன் சகோதரனின் வாளியில் ஊற்றுவதும் தர்மம். * வாழ்க்கையில் உங்களுக்கு கீழிருப்போரை பாருங்கள். மேலிருப்போரை பார்க்காதீர்கள். * நேர்வழியில் செயல்படும் ஒருவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே, அவரை அவ்வழியில் அழைத்தவருக்கும் நன்மை கிடைக்கும். * நெருடலை ஏற்படுத்தும் செயலை செய்வது பாவமாகும். * மூன்று பேர் ஒன்றாக இருக்கும்போது இருவர் மட்டும் ரகசியம் பேசாதீர்கள். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். * ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான். * உங்களுடைய கூலியை மறுமை நாளன்றுதான் முழுமையாகப் பெறுவீர்கள். * எவர் ஒருவர் எதை சம்பாதிக்கிறாரோ, அதற்கு அவரே பொறுப்பாவார். * உங்களுடைய செயல்கள் குறித்து மறுமையில் கேள்வி கேட்கப்படும். * ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார். -பொன்மொழிகள்