களிமண்ணிலும் வளரும் மகேந்திரா - 404 ரக நெல்
'ம கேந்திரா - 404' ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த எல்.வெங்கடேசன் கூறியதாவது: மகேந்திரா - 404 ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். இந்த ரக நெல், தட்பவெப்ப நிலையை பொறுத்து, 120 நாட்களுக்கு மேல் அறுவடைக்கு வரும். இது, களி மண்ணில் அருமையாக வளர்கிறது. இந்த நெல்லின் நெற்கதிர், 2.5 அடி உயரத்திற்கு வளர்வதால், காற்று, மழைக்கு நெற்கதிர் சாயாது. முன்னோடி விவசாயிகள் 1 ஏக்கர் பரப்பளவில் 50 மூட்டை வரை நெல் மகசூல் எடுத்துள்ளனர். நான் பயிரிட்டிருக்கும் களிமண்ணில், 40 மூட்டை மகசூல் கிடைத்துள்ளது. குறிப்பாக, மகேந்திரா - 404 ரக நெல், சன்ன ரகத்திற்கும், குண்டு ரகத்திற்கும் இடைபட்ட நடுத்தர சன்ன ரகம். இந்த நெல்லின் பருமன் கூடுதலாக இருப்பதால் நல்ல எடை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: எல்.வெங்கடேசன், 94453 35139