உள்ளூர் செய்திகள்

ஊதா நிற மிளகாய் சாகுபடியில் லாபம்

ஊதா நிற மிளகாய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது: நான், காய்கறி, கீரை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக்கொண்டு, மீதி காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன். மணல் கலந்த களி மண் பூமியில், பல வித மிளகாய் நட்டுள்ளேன். இதில், ஊதா நிற மிளகாய் நட்டுள்ளேன். இது, பிற ரக மிளகாய் போல இருக்காது. நாட்டு ரகம் மற்றும் ஆந்திரா ரக பச்சை மிளகாய் போல, தடிமனமாக இல்லாமல், காந்தாரி மிளகாய் மிகவும் மெலிதாக இருக்கும். இது, கனத்தில் குறைவாக இருந்தாலும், காரத்தில் பெரியளவில் இருக்கும். வீட்டு தேவை மற்றும் சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், கணிசமான வருவாய்க்கு வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: பி. குகன், 94444 74428


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !