ஏனாத்துாரில் நாளை முயல் வளர்ப்பு பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், முயல் வளர்ப்பு குறித்து ஒரு நாள், இலவச பயிற்சி நாளை அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள், ஆதார் எண் நகலுடன் பங்கேற்கலாம். குறிப்பாக, முதலில் பதிவு செய்யும், 30 விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.தொடர்புக்கு: முனைவர். க.பிரேமவல்லி,பேராசிரியர் மற்றும் தலைவர்,உழவர் பயிற்சி நிலையம், ஏனாத்துார். 044 -27264019 / 88700 20916.