சென்னை ஐ.டி., நிறுவனத்தில் வேலை ஆல்பா கல்லுாரி மாணவர்கள் அசத்தல்
புதுச்சேரி: கல்லுாரி வளாக நேர்முகத் தேர்வில், தகவல் தொழில்நுட்ப நிறுவன வேலைக்காக, புதுச்சேரி ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.புதுச்சேரி பாகூரில் அமைந்துள்ள ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், சென்னையை சேர்ந்த ஆர்ம்சாப்ட்டெக் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வளாக நேர்க்காணலை நடத்தியது.இதில், பி.காம்., பி.சி.ஏ., பி.எஸ்.சி., படிக்கும் 12 மாணவ, மாணவிகள் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி ஆணையை ஆர்ம்சாப்ட்டெக் நிறுவன மனிதவளத் துறை நிர்வாக அதிகாரி தினேஷ் வழங்கினார்.பணி ஆணை பெற்ற மாணவ மாணவிகளை ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு பாராட்டினார்.ஆல்பா கல்வி நிறுவன இயக்குனர் தனதியாகு கூறும்போது, 'ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.எஸ்சி., (கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஏ.ஐ., பி.சி.ஏ., பி.காம்., பி.காம்., (சி.எஸ்.,) பி.ஏ., (ஆங்கிலம்) போன்ற படிப்புகள் உள்ளன.அதுபோல், ஆல்பா இன்ஜினியரிங் கல்லுாரியில் பொறியியலில் சி.எஸ்.இ., மற்றும் ஏ.ஐ., ஐ.டி., மற்றும் ஏ.ஐ., இ.சி.இ., இ.இ.இ., மெக்கானிக்கல் போன்ற படிப்புகளில் சேரலாம். சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது' என்றார்.