முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் மாணவிகளை முந்திய மாணவர்கள்
கோவை: கோவை மாவட்டத்தில், முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் மாணவிகளை விட, அதிக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பிளஸ் 2 முடித்ததும், இத்தொகையை மாணவர்கள் வங்கியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.அதிக மதிப்பெண்கள் பெறும் தலா 500 மாணவர்கள், 500 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, மாதம் 1,000 ரூபாய், இளங்கலை படிப்பு முடிக்கும் வரை, கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதற்கான தேர்வு, அக்டோபரில் நடந்தது. ரிசல்ட் தற்போது வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில், இப்பட்டியலில் 19 மாணவர்களும், 14 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர்.