உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதித்த அச்யுதா பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல்: சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் திண்டுக்கல் அச்யுதா பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். மாணவர் ஆஜேஷ் ரியன் 500க்கு 488 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடம் பெற்றார். மாணவி ராபியா ஷாப்ரின் 486, ரேஹோன் ஆன்டோ 482, சிவகணபதி 481, அஷ்வின் 480 மதிப்பெண் பெற்றனர்.தமிழ் பாடத்தில் 10, சமூக அறிவியலில் 2, ஆங்கிலம், அறிவியலில் தலா ஒருவர் 100 மதிப்பெண்களுடன் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றும் சாதனை படைத்தனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்திரி பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினர். பள்ளியின் முதன்மை முதல்வர் சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் ஞான பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, ராஜசுலோச்சனா, பிரபா, அருண் ஷாேரி, விஜயசாந்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், ரங்கராஜன், முதன்மை மேலாளர் பிரபாகரன், துணை மேலாளர் ஜான் கிரிஸ்டோபர், அலுவலக பணியாளர்கள் மாணவர்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்