உள்ளூர் செய்திகள்

நற்பண்புகள் கற்றுத்தருவதும் ஒரு ஆசிரியரின் கடமை தான்

கோவை: கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரியில் 66வது பட்டமளிப்பு விழா கல்லுாரி முதல்வர் அகிலா தலைமையில் நடந்தது. கோவை மண்டலக் கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் செண்பகலெட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கெண்டார்.அவர் பேசியதாவது:கல்வியே உலகத்தை மாற்றும் மிக வலிமையான ஆயுதம் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். பாடத்தை நடத்துவது மட்டும் ஆசியர்கள் பணி இல்லை. சிறந்த தலைமுறையை, நல்ல சமுதாயத்தை உருவாக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.பாடங்களைத் தாண்டி, அறநெறிகள், குடிமை உணர்வு, மனிதம் உள்ளிட்ட நற்பண்புகளை கற்றுத்தர வேண்டும். மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் நல்வழிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். 80க்கும் மேற்பட்ட பி.எட்., மற்றும் 15 எம்.எட்., மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்