ஜே.எஸ்.எஸ்., கல்லுாரியில் சர்வதேச தரப்பயிற்சி பட்டறை
ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில் மூன்று நாள் செயல்முறை பயிற்சி பட்டறை நடந்து வருகிறது.உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் கீழ் இயங்கி வரும் இக்கல்லூரியில், 2025 தரவரிசையில் தேசிய அளவில், 4வது இடத்தை பெற்றுள்ளது. ஐ.சி.எம்.ஆர்., டி.எச்.ஆர்., டில்லி மருந்தியல் பகுப்பாய்வுத் துறை சார்பில் பயிற்சி பட்டறை நடந்து வருகிறது.துவக்க நிகழ்ச்சிக்கு, கல்லுார் துணை முதல்வர் அருண் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார்.ஜே.எஸ்.எஸ்., மருத்துவக் கல்லுாரி தலைவர் அகிலா பிரசாந்த், ஜே.எஸ்.எஸ்., உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி டீன் பிரசாந்த் ஆகியோர் இதன் பயன் குறித்து பேசினர். நிகழ்ச்சியில், அறிவியல் அமர்வுகளில் ஏ.ஐ., தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன மருந்தியில் ஆராய்ச்சி கருவிகள் குறித்து செயல்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டது.இந்த பயிற்சி பட்டறையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.