உள்ளூர் செய்திகள்

வானுார் கல்லுாரியில் ஆண்டு விழா

வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 4ம் ஆண்டு விழா நடந்தது.தமிழ்த்துறைத் தலைவர் அருளமுதம் வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் அரங்க பண்பில்நாதன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் விழுப்புரம் அண்ணா அரசு கல்லுாரி முதல்வர் சிவக்குமார், மாணவர்கள் தன்னம்பிக்கையோடும், ஒழுக்கத்தோடும் கல்வி கற்பதன் மூலம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றார்.விழாவில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் காந்திமதி, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் மற்றும் கல்லுாரி ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்