உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

உடுமலை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் இன்று முதல் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 26ம் தேதி துவங்குகிறது. ஏப்ரல், 8ம் தேதி நிறைவு பெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 31 ஆயிரத்து, 893 பேர் பத்தாம் வகுப்பு தேர்வெழுத உள்ளனர்.தேர்வுகள் துறை விடுத்துள்ள அறிவிப்பில், பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவ, மாணவியர் ஹால்டிக்கெட்டை இன்று (20ம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்