உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துவா ஓதி பணிகளை தொடங்கிய அமைச்சர்

துவா ஓதி பணிகளை தொடங்கிய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஷாஜஹான், துவா ஓதி, தன் பணிகளை தொடங்கினார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜஹானுக்கு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலை, கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றார். அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு, அரசு காரில் வந்தார். அமைச்சருடன் அவரது குடும்பத்தினர், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி உள்ளிட்டோர் வந்தனர்.அமைச்சர், தன் இருக்கையில் அமர்வதற்கு முன், இஸ்லாமிய குருமார், துவா ஓதினர். அதன்பின் அமைச்சர் தன் இருக்கையில் அமர்ந்து, பணிகளை தொடங்கினார்.இதேபோல், சமூக நீதித் துறை அமைச்சராக பதவியேற்ற, வி.சி.க.,வை சேர்ந்த வன்னி அரசு, தலைமைச் செயலகத்தில், தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு, வி.சி.க., தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகளுடன் வந்தார்.அவருக்கு திருமாவளவன் பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்து, அவரை அமைச்சர் இருக்கையில் அமர வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

R. SUKUMAR CHEZHIAN
மே 23, 2026 23:28

இந்திய முஸ்லிம் லீக் கட்சி நம் பாரத தேசதில் நிம்மதியாக கெளரவமாக சுதந்திரமாக இருப்பதற்கு காரணம் காந்தியடிகள் போட்ட பிச்சை இல்லை என்றால் இன்று பாகிஸ்தானில் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பார்கள்.


kulanthai kannan
மே 23, 2026 21:30

வீரமணி வாயில் வாழைப்பழம்


M S RAGHUNATHAN
மே 23, 2026 21:00

இதற்கு திமுக ஐ சேர்ந்த முன்னாள் தர்மபுரி MP செந்தில் அவர்கள் நிலை என்ன.? ஏன் ஒரு பூசாரி, ஒரு கடவுள் மறுப்பாளர், pastor ஆகியோரை அழைத்து மந்திரங்கள்/ சுவிசேஷம்/ வெங்காய வாழ்த்து சொல்லப் படவில்லை.


ஆரூர் ரங்
மே 23, 2026 20:01

இது போலத்தான் அசாமிலும் மேற்குவங்கத்திலும் நிறைய தூஆ ஓதினார்கள் என்னாச்சு?


ஆகுயார்தான்
மே 23, 2026 19:20

தர்மபுரி எம் பி எங்கே? பூமி பூஜைக்கு இமாம் எங்கே, சர்ச் ஃபாதர் எங்கே திராவிடர் ஓசி சோறு எங்கே அப்டின்னு உதார் விட்டார்? இப்போ இவர்களை, கோவில் பூசாரி எவரும் இந்த அமைச்சரின் அறையில் பிரார்த்தனை செய்ய அழைப்பு இல்லயே? ஓ இதுதான் ஒரு குறிபிட்ட மதம் சார்ந்த மதசார்பின்மையா. தாஜா அரசியல் ஓட்டு வங்கி கொள்ளை.


sankaranarayanan
மே 23, 2026 19:17

இதே போன்று இந்திய நாட்டில் இந்துக்கள் செய்தால் பெரிய ஆர்பாட்டம் அமர்க்களம் ஆளுக்கு ஆள் தாங்காத வார்த்தைகளில் வெளியிடுவது அப்பப்பா கேட்கவே நாராசமாக இருக்கும் காதும் கூசும் என்னடா இந்த அரசியல் உலகிலேயே இந்துமதம் ஒன்றுதான் அடுத்த மதங்களை மதிப்பது மரியாதை கொடுப்பது இதனால் இந்து மதம் மென்மேலும் வளர்ந்து கொண்டேதான் போய்க்கொண்டிருக்கிறது அடுத்தவைகள் காலப்போக்கில் தானாகவே அழிந்து விடுகின்றன


iyer folsom
மே 23, 2026 18:36

வரவேற்கிறோம். மாஷா அல்லாஹ்


ravindran
மே 23, 2026 17:31

ஷாஜகான் ஓதி தன் பணியை தொடங்கினார்


சந்திரசேகர்
மே 23, 2026 16:47

பிஜேபி உள்ளே புகுந்துடும். அதனால் இந்த துவா செய்கிறோம் திருமா உளறல். இவங்க தான் மதசார்பற்ற கூட்டணியில் இருந்தார்கள். இவர்கள் துவா செய்வது என்னமோ நல்ல விசயம் தான். ஏனென்றால் அவர்கள் மத சடங்குகளை பின்பற்றுகின்றனர். ஆனால் சனாதனத்தை ஒழிப்பேன் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது.


ஜெகதீசன்
மே 23, 2026 16:31

முஸ்லீம் லீக் என்ற பெயரோடு செயல்படும் மதவாத கட்சி நம்மூரில் மதசார்பின்மை. தேசியவாதம் போற்றும் பாஜக மதவாத கட்சி. கொடுமை.


Palanisamy T
மே 23, 2026 20:15

இந்தக் கேள்வியை நீங்கள் எல்லாம் தெரிந்த முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர் அவர்களிடம் கேட்டிருக்க வேண்டும். தமிழர்களை தேவையில்லாமல் பகைத்துக் கொண்டு தங்கள் தலையிலேயே தங்களாகவே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டவர்கள் இவர்கள்.