தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை
அரியாங்குப்பம்: குடும்ப பிரச்னையில் மனமுடைந்த தனியார் கம்பெனி ஊழியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியாங்குப்பம் கோலஸ் நகரை சேர்ந்தவர் ராஜா, 43; இவர் வில்லியனுார் தனியார் கம்பெனியில் ஊழியராக பணி செய்து வந்தார். கணவன் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்தது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.