கரூர் குப்பை கிடங்கில் 2வதுநாளாக தீ அணைக்கும் பணி
கரூர் குப்பை கிடங்கில் 2வதுநாளாக தீ அணைக்கும் பணிகரூர்:கரூர் அருகே, குப்பை கிடங்கில் நேற்று இரண்டாவது நாளாக, தீயை அணைக்கும் பணி நடந்தது.கரூர், வாங்கல் சாலையில் உள்ள அரசு காலனி பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் இரவு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கரூர் தீயணைப்பு துறை வீரர்கள், குப்பை கிடங்கு சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாக இருந்ததாலும், பலமாக காற்று வீசியதாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.இந்நிலையில், நேற்று காலை தொடர்ந்து இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணியில், கரூர், புகழூர், அரவக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதனால், கரூர்-வாங்கல் சாலையில் புகை மூட்டம் காணப்பட்டது.1