தமிழக பெண் இசையமைப்பாளருக்கு 6 விருதுகள்
தமிழக இசையமைப்பாளர் ஜனனிக்கு சிறந்த பாடகி மற்றும் இசையமைப்பாளருக்கான 6 CLEF இசை, வானொலி மற்றும் இசை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சினிமா பிரிவில் ரயில் திரைப்படத்திற்கான 4 விருதுகள்: பூ பூக்குது ("ரயில்" படத்தில் இருந்து) பாடலுக்கு சிறந்த இசையமைப்பாளர் ஏலை செவத்தவனே ("ரயில்" படத்தில் இருந்து) பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகி சிறந்த திரைப்படப் பாடல் - பூ பூக்குது பாடலுக்கான தமிழ் ("ரயில்" படத்தில் இருந்து) & எது உன் இடம் ("ரயில்" இலிருந்து) பாடலுக்கான சிறந்த இசை அமைப்பாளர் மற்றும் புரோகிராமர். பிரம்மா குமாரிகளின் “சிவனே சிவனே ஓம்” பாடலுக்கான 2 விருதுகள் பக்தி- சிறந்த இசையமைப்பாளர் & பக்தி- சிறந்த பாடல்/ஆல்பம் - தமிழ் வகைகள். இந்த விருதுகள் பெறுவதற்குக் காரணமான இறைவனுக்கும், CMA குழுவினருக்கும், நடுவர்களுக்கும், ரயில் திரைப்படத் தயாரிப்பாளர் வேடியப்பன், இயக்குனர் பாஸ்கர் சக்தி, பாடலாசிரியர் ரமேஷ் வைத்யா, பாடகர் ஹரிஹரன் அனந்து, பாடலாசிரியர் என். குமார் மற்றும் இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் ஜனனி நன்றி தெரிவித்துள்ளார். இந்த விருதுகள் மும்பையில் நடைபெற்ற விழாவில் ஜனனிக்கு வழங்கப்பட்டது.