மயிலாடுதுறை கார்க்கும் பிள்ளையார் கோவிலில் பாலாலயம்
மயிலாடுதுறை மாவட்டம், கூறை நாட்டில் அமைந்துள்ள மிக பழமை வாய்ந்த கார்க்கும் பிள்ளையார் கோவிலில் முத்துசாமி மற்றும் கார்த்திகேயன் சிவாச்சாரியார்கள் தலைமையில் பாலாலயம் மிக விமரிசையாக நடைபெற்றது. அனுக்ஞை பூஜையுடன் துவங்கி இரண்டு கால ஹோமங்கள், கடம் அபிஷேகம், பாலாலயம், வாஸ்து பூஜையுடன் ஆலய திருப்பணி துவங்கியது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் விபரங்களுக்கு : எஸ். ஹரிஹரன் : 9848197131 - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்