இன்றைய போட்டோ
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் வீதியில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், பாரசக்தியம்மனுடன் 'திருவூடல்' நிகழ்ச்சியில் எதிர் எதிரில் சுவாமிகள் ஆடிய காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி, ''அண்ணாமலையாருக்கு அரோகரா'' என கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
16-01-2024 | 20:20
மேலும் இன்றைய போட்டோ
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வந்த எல் வடிவ மேம்பாலம் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இன்னும் சில வாரங்களில் திறக்கப்பட உள்ளது.இடம் : அடையாறு
02-02-2026 | 22:22
திருவள்ளூர் திருத்தணி சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே அளவுக்கு அதிகமாக இருசக்கர வாகனத்தில் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் கட்டை ஸ்டூல்
02-02-2026 | 22:21
திருவள்ளூர் காக்களூர் ஏரியில் முழுவதும் உள்ள செடி கொடிகளை பொக்லின் இயந்திரம் மூலம் அகற்றப்படுகிறது
02-02-2026 | 22:21
அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்பட்டது
02-02-2026 | 22:20
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
02-02-2026 | 18:29
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள கோவில்களில் உள்ள யானைகள் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு ஒய்யாரமாக நடந்துவருகிறது..
02-02-2026 | 18:29