இன்றைய போட்டோ
திருப்பூரில் 1191 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி பகுதிகளுக்கு புதிய குடிநீர் திட்டம் தொடக்க விழா சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. திட்டங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். அருகில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, செய்தி மக்கள் துறை அமைச்சர் சாமிநாதன், மேயர் தினேஷ்குமார், தெற்கு எம் எல் ஏ செல்வராஜ், எம்.பி சுப்பராயன் ஆகியோர் உடனிருந்தனர்.
11-02-2024 | 11:46
மேலும் இன்றைய போட்டோ
நம் அண்டை நாடான நேபாளத்தில் மாணவர் போராட்டங்களால் கடந்தாண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வரும்,மார்ச் 5 ம் தேதி பார்லிமென்டுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு தீவிர பயிற்சி தற்போது வழங்கப்படுகிறது. இடம்: காத்மாண்டு.
04-02-2026 | 22:29
ஐரோப்பாவில் வீசும் கடும் குளிர்காலக் காற்றினால் பால்டிக் கடலின் கடற்கரை பகுதிகள் உறைந்து பனிக்கட்டியாக மாறியுள்ள சூழலில், ஜெர்மனியின் ஷார்பியூட்ஸ் நகரில் பலத்த காற்றையும் பொருட்படுத்தாமல் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்.
04-02-2026 | 22:29
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவல்பூர் நெடுஞ்சாலை ஓரத்தில் சாலை பணிக்காக கொட்டப்பட்ட 60 ஆண்டுகள் பழமையான அரச மரம், செங்காடு ஏரிக்கரையில் மீண்டும் நடப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
04-02-2026 | 22:29
அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் உள்ள போபிடோரா வனவிலங்கு சரணாலயத்தில், பனிமூட்டம் சூழ்ந்த ஒரு குளிர்கால காலை வேளையில் யானைகளுடன் செல்லும் பாகன்கள்.
04-02-2026 | 22:29
மத்திய அரசு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் துவங்கும் முன், வந்திருந்தவர்களுக்குக் கட்சி கரை போட்ட துண்டுகள் வழங்கப்பட்டு, பக்காவாகப் புகைப்படம் எடுக்கப்பட்டது. கோஷங்கள் அடக்கி, ஆர்ப்பாட்டம் ஒரு வழியாக முடிந்த உடன் தொண்டர்களின் தோளில் இருந்த துண்டுகள் அவசர அவசரமாக திரும்பப் பெறப்பட்டன. கேட்ட போது அடுத்த ஆர்ப்பாட்டத்துக்கு வேண்முல்ல… என்றனர். உருவிய துண்டுகளுடன் காங்கிரஸ் தொண்டர்.
04-02-2026 | 22:28