உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் வயலில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

26-02-2024 | 02:52


மேலும் இன்றைய போட்டோ

பள்ளிகள் விடும் நேரத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால் ஆசிரியர் ரோட்டில் நின்று வாகனங்களை நிறுத்தி மாணவர்கள் ரோட்டை கடக்கின்றனர்.உடுமலை குட்டை திடல் பஸ் ஸ்டாப் அருகில்.

11-02-2026 | 21:07


நவக்கரை ஏ.ஜே.கே., கல்லூரியில் பெண்களுக்கான மைக்ரோகிரின்ஸ் மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நடந்தது.

11-02-2026 | 16:38


சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சார்பில் பத்தாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11-02-2026 | 16:38


கோவை உக்கடம் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

11-02-2026 | 16:37


சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஊராட்சி செயலர் சங்கம் சார்பில் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11-02-2026 | 16:37


விழுப்புரம் அரசு கலை கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

11-02-2026 | 16:37


சென்னை காயிதே மில்லத் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது கோரிக்கை மனுக்களை மாணவிகளுக்கு வழங்கினர்.

11-02-2026 | 16:37


புதுச்சேரி வெங்கடசுப்ப ரெட்டியார் சிலை அருகே முதல்வர் ரங்கசாமி வாகனத்தை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

11-02-2026 | 16:36


தே.மு.தி.க அலுவலகத்திற்கு விருப்ப மனு வாங்க வந்த அக்கட்சியினர் சாலையிலேயே வாகனங்களை விட்டுச் சென்றதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம்: கோயம்பேடு .

11-02-2026 | 16:36