இன்றைய போட்டோ
பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் 75ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் வரலாற்று புத்தகம் வெளியிடப்பட்டது. இடமிருந்து வலம் - பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் நிர்வாகி கிரிஜா வைத்தியநாதன், இந்திய குழந்தைகள் நல கவுன்சில் தலைவர் ஆண்டாள் தாமோதரன், பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் நிர்வாகி மனோஜ் குமார் சொந்தாலியா , அறங்காவலர் நட்ராஜன், வரலாற்று புத்தகத்தை வெளியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், டென்மார்க் பிராடே ஸ்டிப்டங் போர்ட் தலைவர் லார்ஸ் ஆட் பீட்டர்சன், பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் என்.குமார், நிர்வாகி ரமேஷ் மங்கலேஷ்வரன் மற்றும் பொது செயலர் மாயா கெய்டொண்டே. இடம் : சேத்துப்பட்டு, சென்னை
10-03-2024 | 22:10
மேலும் இன்றைய போட்டோ
பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
01-02-2026 | 10:47
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நிலவும் கடும் பனிபொழிவால் பத்ரிநாத் கோவில் முழுவதும் வெண் பனியால் போர்த்தப்பட்டு ரம்மியமாக காட்சி அளித்தது.
01-02-2026 | 06:56
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
01-02-2026 | 06:53
தினமலர் கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி, சென்னை திருவேற்காடு ஆர்.எம்.கே., சோழா குடியிருப்பில் நடந்தது. இதில் நடந்த கோலப்போட்டியில் பங்கேற்ற குடியிருப்புவாசிகள்.
01-02-2026 | 06:50
டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள புகழ்பெற்ற அமிர்த உத்யானம் எனப்படும் மலர்த்தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக வரும் 3ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை திறக்கப்படுகிறது. தோட்டத்தில் பூத்து குலுங்கிய வண்ண மலர்கள்.
01-02-2026 | 06:41
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் 2019, பிப்.,14ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அந்த வடுக்களில் இருந்து மெல்ல மீண்டும் புதுப்பொலிவை புல்வாமா பெற்றுள்ளது.
01-02-2026 | 06:37
தைப்பூச விழாவை முன்னிட்டு, பழனி பெரியநாயகியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி.
01-02-2026 | 06:32