உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை வரதராஜபுரத்தில் உள்ள சாய் விவேகா ஹாலில் வல்லுநர்களின் அரசியல் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அண்ணாமலையின் திருப்புமுனை புத்தகம் வெளியிட்டு விழா நடந்தது. இதில் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். இடமிருந்து வலம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துராமன், ஜனனம் நிர்வாக இயக்குனர் முரளி, செஸ் கோச் ரமேஷ், சாணக்யா நிர்வாக இயக்குனர் ரங்கராஜ் பாண்டே,நூலாசிரியர் சுரேஷ்குமார் பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி உள்ளிட்டோர்.

06-04-2024 | 22:16


மேலும் இன்றைய போட்டோ

திருச்சி துவாக்குடியில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனும் தொழில்நுட்பக் கல்லுாரியில் (முன்பு ரீஜனல் இன்ஜினியரிங் கல்லுாரி) 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் (1981- 85 பேட்ச்) மீண்டும் சந்திக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில் குழு புகைப்பட ம் எடுத்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்.

07-02-2026 | 00:16


முன்னாள் மாணவர்கள் (1981 - 85 பேட்ச்) சந்திப்பின் அடையாளமாக, திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி நிர்வாகத்திற்கு மாணவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினர். இடமிருந்து: கல்லுாரி டீன் ஜெயபால், முன்னாள் மாணவர்கள் சிவநமச்சிவாயம், பொன்னி, கல்லுாரி இயக்குனர் அகிலா, முன்னாள் மாணவர்கள் கார்த்திக், இல. ஆதிமூலம், பேராசிரியர்கள் பிரபுகுமார், ஜெரோம்.

07-02-2026 | 00:15


2023ம் ஆண்டிற்கான சிறந்த முன்னாள் மாணவர் விருது தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம் (இடது), 2024ம் ஆண்டிற்கான சிறந்த முன்னாள் மாணவர் விருது சிவநமச்சிவாயத்துக்கு வழங்கப்பட்ட து. விருதுகளை கல்லுாரி இயக்குனர் அகிலா வழங்கினார்.

07-02-2026 | 00:15


சமூக களப்பணிக்கான நிதி பங்களிப்பை கொடுக்காததை கண்டித்து சென்னை பல்கலை வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

06-02-2026 | 22:12


தமிழக அரசை கண்டித்து அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

06-02-2026 | 22:11


சமூக களப்பணிக்கான நிதி பங்களிப்பை கொடுக்காததை கண்டித்து சென்னை பல்கலை வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

06-02-2026 | 22:11


கோவை ரேஸ் கோர்சிலுள்ள ஶ்ரீ சத்ய சாய் மந்திரில், பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளீஸ் 2 மாணவர்களுக்கான ஸ்ரீ லட்சுமி ஹயகிரீவர் ஹோமம் நடத்தப்பட்டது.

06-02-2026 | 22:11


திருநெல்வேலி மாவட்டம் கூந்தன் குளம், வடக்கு கழுவூர் பறவைகள் சரணாலயப் பகுதிகளுக்கு மணிமுத்தாறு தண்ணீர் வராததால் குளங்கள் காய்ந்து கிடக்கின்றன உணவின்றி வெளிநாட்டு பறவைகள் பரிதாபமாக இறக்கின்றன...

06-02-2026 | 22:10


திருமுருகன்பூண்டி, செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம் நடந்தது.

06-02-2026 | 22:10