இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தாயின் அரவணைப்பை விட சிறந்த பாதுகாப்பு எதுவுமில்லை என்பது போல, குட்டிகளை அணைத்து கூட்டு குடும்ப உன்னதத்தை உணர்த்தும் குரங்கு குடும்பம். இடம்: ஆழியாறு ரோடு.
02-10-2025 | 10:16
ஊட்டியில் காலையில் வெயிலான காலநிலை நிலவி வந்த நிலையில், கேத்தி பள்ளதாக்கு பகுதியின் பசுமையான தோற்றம் பயணிகளை பரவசப்படுத்தியது.
02-10-2025 | 10:16
விஜயதசமியையொட்டி, கோவை ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த துர்கா மகாலட்சுமி, சரஸ்வரி தாயார் ஆகிய முப்பெரும் தேவியர்.
02-10-2025 | 10:15
விஜயதசமி முன்னிட்டு, கோவை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு 'அ'னா, 'ஆ'வன்னா எழுத பயிற்றுவிக்கும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது .
02-10-2025 | 09:05
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுந்திரப்புள்ளி ஆதிகேசவ புரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மகாநவமி நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, 15 யானைகளின் அணிவகுப்பில் முத்துமணி வண்ண குடைகள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
02-10-2025 | 07:59
சிறுமியரை துர்க்கையின் அவதாரமாக வழிபடும் குமாரி பூஜை வட மாநிலங்களில் நடந்தது. உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் நடந்த நிகழ்வில் ஒரு பெண் குழந்தையின் கால்களை கழுவி பூஜை செய்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
02-10-2025 | 07:59