உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் இடமிருந்து வலம்- பன்னாட்டு அரிமா சங்கத்தின் மாவட்ட தலைவர் ராகவேந்திரா மணி(செயல்பாடு), வட்டார தலைவர் விஜய் ஆனந்த், பொருளாளர் சிவகுமார், செயலர் உதயகுமார், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் வரதகுட்டி, மேற்கு மாம்பல வியாபாரிகள் நல சங்க செயலர் நெல்லை சிவராஜ், மாற்றுத்திறனாளிகள் நலன் அரிமா மாவட்ட தலைவர் கோபிநாத், சங்கத்தின் முன்னாள் ஆளுனர் மணிலால் மற்றும் சாய் துணை மேட்ரிமோனியல்ஸ் நிறுவனர் பஞ்சாபகேசன். இடம் : எம்.ஜி.ஆர் நகர், சென்னை

21-06-2024 | 21:15


மேலும் இன்றைய போட்டோ

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்று, வரும் நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது.

21-06-2026 | 13:59


உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.

21-06-2026 | 13:43


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி செய்தார்.

21-06-2026 | 12:52


காரைக்குடி அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் நடந்த மீன் பிடி திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற கிராமத்தினர்.

20-06-2026 | 12:21


காரைக்குடி அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் நடந்த மீன் பிடி திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற கிராமத்தினர்.

20-06-2026 | 12:18


திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

19-06-2026 | 22:29


புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

19-06-2026 | 22:29


கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.

19-06-2026 | 22:29


கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததையொட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு பேச்சுவார்த்தை நடத்தினார்.

19-06-2026 | 22:28