இன்றைய போட்டோ
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரைபகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கோவில் முன்புள்ள கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு 10 அடி ஆழத்திற்கு கடலில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் புனித நீராட முடியாமல் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.கோவில் நிர்வாகம் மாற்று ஏற்பாடுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
03-01-2025 | 19:33
மேலும் இன்றைய போட்டோ
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்று, வரும் நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது.
21-06-2026 | 13:59
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
21-06-2026 | 13:43
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி செய்தார்.
21-06-2026 | 12:52
காரைக்குடி அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் நடந்த மீன் பிடி திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற கிராமத்தினர்.
20-06-2026 | 12:21
காரைக்குடி அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் நடந்த மீன் பிடி திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற கிராமத்தினர்.
20-06-2026 | 12:18
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
19-06-2026 | 22:29
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
19-06-2026 | 22:29