உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

காரைக்குடியில் நடைபெற்ற வளர்தமிழ் நூலகம் மற்றும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவி அவர்கள் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். இடமிருந்து கவிஞர் வைரமுத்து, உயர்கல்வி அமைச்சர் செழியன், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், அமைச்சர் பெரிய கருப்பன். எம்.பி. கார்த்தி,எம்.எல்.ஏ. மாங்குடி.

21-01-2025 | 15:35


மேலும் இன்றைய போட்டோ

சிதம்பரம் தில்லை கோவிந்த ராஜ பெருமாள் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. மூலவர் சன்னிதி கோபுர விமானத்தில் புனித நீர் ஊற்ற பக்தர்கள் கோவிந்தா நாமம் முழங்கினர்.

04-11-2025 | 08:45


திருவள்ளூர் மாவட்டம், கொப்பூர் ஊராட்சியில் உள்ள கிளை நூலகம், மதுக்கூடமாக மாறியது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிளை நூலகம் சீரமைக்கப்பட்டு உள்ளது.

04-11-2025 | 08:40


உலக கல்விக்கழகங்கள் கூட்டமைப்பின் 8ம் ஆண்டு மாநாடு டில்லியில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, வேலூர் விஐடி பல்கலை வேந்தர் கோ.விசுவநாதனுக்கு, 'வாழ் நாள் சாதனையாளர் விருது' வழங்கி கவுரவித்தார்.

04-11-2025 | 08:34


அலையன்ஸ் பிரான்சைஸ் ஆப் மெட்ராஸ் வளாகத்தில் திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணியின் ஓவிய கண்காட்சி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக கண்டு ரசிக்கலாம். இடம்: நுங்கம்பாக்கம்.

04-11-2025 | 07:53


டில்லி முத்தமிழ் பேரவை நடத்திய பக்தி இசை நிகழ்ச்சியில், சுதா ரகுராமன் கர்நாடக இசைக் கச்சேரி நடத்தினார்.

04-11-2025 | 07:49


அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் சார்பில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைக்கப்பட்ட அப்பல்லோ ஆயுர்வேத மருத்துவமனையை அக்குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டி திறந்து வைத்தார்.

04-11-2025 | 07:46


அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், செத்து மிதக்கும் மீன்கள். இடம்: ரேடியல் சாலை, பள்ளிக்கரணை.

04-11-2025 | 07:41


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, உள் பிரகாரத்தில் உற்சவர் சந்திரசேகர், சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

04-11-2025 | 07:37


காய்கறி நாற்றுகள் நடவு செய்வதற்காக விவசாயிகள் நிலத்தை உழுது வைத்துஉள்ளனர். இடம்: உடுமலை.

04-11-2025 | 07:31