உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க கோரி தூத்துக்குடி கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விசைப்படகு மீனவர்கள்.

15-02-2025 | 16:47


மேலும் இன்றைய போட்டோ

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல், இயற்கை அழகை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். ஆனால் சமீப காலமாக அரசியல்வாதிகள், அதிகாரிகள் தலையீட்டால் புற்றீசல் போல் பெருகிவிட்ட விதி மீறல் கட்டங்களால் பேரிடர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடம்: குன்னூர்.

06-11-2025 | 10:32


சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 556வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள குருத்வாராவில் வழிபடுவதற்காக குவிந்த சீக்கியர்கள்.

06-11-2025 | 09:21


தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மணிலாவில் நடைபெற்ற 'மிஸ் எர்த்' என்கிற சுற்றுச்சூழல் உலக அழகி போட்டியில் வென்ற, செக் குடியரசைச் சேர்ந்த நாடலி புஷ்கினோவாவை வாழ்த்திய சக போட்டியாளர்கள்.

06-11-2025 | 09:18


அமெரிக்காவில் அரசு செலவினங்களுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால், நிதி முடக்கம் ஏற்பட்டு பலருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இடம்: ஆஸ்டின், டெக்சாஸ் மாகாணம்.

06-11-2025 | 09:09


பீஹார் மாநிலம் பாட்னாவில் ரயிலில் ஆபத்தான முறையில் சென்ற பயணியர்.

06-11-2025 | 08:45


உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பவுர்ணமியை ஒட்டி, திரண்ட பக்தர்கள்.

06-11-2025 | 08:37


காஞ்சிபுரம் பழவேரி பாலாற்று படுகையில், நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்.

06-11-2025 | 07:01


செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் ஐப்பசி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு, ஞானலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடந்தது.

06-11-2025 | 06:58


ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மூலவர் ரத்தினகிரீஸ்வரர். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், அன்னாபிஷேக அலங்காரத்தில் ஆகாச லிங்கம்.

06-11-2025 | 06:54