உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உடுமலை வடபுதனத்தில் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச் சோள பயிர்களை அறுவடை செய்த தொழிலாளர்கள் மிஷினில் போட்டு பிரிக்கின்றனர்.

19-02-2025 | 15:12


மேலும் இன்றைய போட்டோ

திண்டுக்கல்லில் வீடு வீடாக சென்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வர போகுது… நல்ல காலம் பிறக்க போகுது...' என குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வந்த திமுக தொண்டர் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு வீட்டின் முன் ஒட்டப்படிருந்த அதிமுக- திமுக ஆதரவு ஸ்டிக்கர்களை பார்த்து திகைத்து போய் நின்றார்.

14-04-2026 | 06:31


திண்டுக்கல்லில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் நடிகர்கள் ரஜினிகாந்த் , அஜித் இருக்கும் படத்தை பரிசாக வழங்கிய சிறுமி.

13-04-2026 | 23:10


திண்டுக்கல்லில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.

13-04-2026 | 23:10


ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தாமு அன்பரசன் அவர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நங்கநல்லூர் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

13-04-2026 | 23:10


விருத்தாசலம் பாலக்கரையில் பா.ம.க., வேட்பாளர் தமிழரசி, திட்டக்குடி வேட்பாளர் முருகமாறன், ஆகியோரை ஆதரித்து பா.ம.க .,தலைவர் அன்புமணி பேசினார்.

13-04-2026 | 21:28


திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி...

13-04-2026 | 21:28


விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றின் இணைப்பு மேம்பாலம், உள்வாங்கியது. இன்டர் லாக் முறையில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் அகற்றப்பட்டதுடன், முதல் கட்டமாக சுமார் 240 அடி தூரம், சாலை ஒட்டுமொத்தமாக பெயர்ந்து எடுக்கும் பணி நடந்து வருகிறது.

13-04-2026 | 21:27


இன்று இதற்குத்தான் மதிப்பு அதிகம்.! அரசியல்வாதிகள் முதல் அடிமுதல் தொண்டன் வரை ஆசை கொள்வது இந்த நாற்காலிகளுக்குதான். மாநாடு என்றாலும் மக்கள் கூடும் இடம் என்றாலும் முதலில் நாற்காலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரிசையாக அடுக்கி விடுவர். மழையோ, வெயிலோ குடையாகும், நிற்கவும், உடைக்கவும் கூட உதவும் கட்சி தொண்டர்களுக்கு. அதனை உணர்ந்த வியாபாரி ஒருவர் லாரிகளில் வரிசையாக சேர்களை அடுக்கி எடுத்துச் செல்கிறார். இடம்: மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, சாய்பாபாகோவில், கோவை

13-04-2026 | 21:26


கோடை வெயிலின் தாக்கம்....தண்ணீர் வரத்து குறைந்ததால் ஆற்றில் மீன் பிடி தொழில் சுனக்கம்.இடம்: பவானி ஆறு .சிறுமுகை அருகே உள்ள மூலையூர்

13-04-2026 | 21:25