உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஜப்பானில் முதல் ஏவுகணை சோதனை: கிழக்கு ஆசிய நாடான ஜப்பான், போதிய நிலப்பரப்பு இல்லாத காரணம் மற்றும் பாதுகாப்புக்காக, அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தே இதுவரை ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. முதன்முறையாக, நேற்று தங்கள் நாட்டு எல்லைக்குள் இருந்து, நிலத்தில் இருந்து கப்பல்களை தாக்கும் 'டைப் 88' என்ற ஏவுகணையை சோதித்தது. இது கடற்கரையில் இருந்து 40 கி.மீ.,க்கு அப்பால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஆளில்லா படகை துல்லியமாக தாக்கியது. இந்த ஏவுகணை ஜப்பான் எல்லைக்குள் அத்துமீறும் சீன கப்பல்களை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

25-06-2025 | 12:17


மேலும் இன்றைய போட்டோ

ஸ்தம்பித்தது காந்திபுரம்:தீபாவளியை முன்னிட்டு ஷாப்பிங் செய்ய கூடிய மக்கள் வெள்ளத்தால் கோவை காந்திபுரம் ஸ்தம்பித்தது.

05-10-2025 | 18:22


சாரல் மழை பெய்தாலும் ஆதவனின் ஒளி மேககூட்டங்களிடயே அழகு தான்.இடம்: காரமடை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம், கணுவாபாளையம் .

05-10-2025 | 16:20


பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பு சார்பில், லடாக்கின் மிக் லா பாஸ் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 19,400 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் உயரமான சாலையில், கட்டுமான பணியாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

05-10-2025 | 07:02


ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்து வரும் சர்வதேச தசரா விழாவில் அம்மாநிலத்தின் நாட்டி என்ற பாரம்பரிய நடனமாடி அசத்திய நடன கலைஞர்கள். இடம்: குலு.

05-10-2025 | 07:02


ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தால் ஏரியை தூய்மைப்படுத்தும் நோக்கில், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட படகோட்டிகள்.

05-10-2025 | 07:02


கடலூர் பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் விவசாயிகள் பயிர் செய்யப்பட்ட மஞ்சள் சாமந்தி பூ பூத்து குலுங்கியது.

05-10-2025 | 06:15


விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி வைகுண்டவாச பெருமாள் சீனிவாச அலங்காரத்தில் சகஸ்ரதீப ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

05-10-2025 | 05:31


திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.

04-10-2025 | 22:21


சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி

04-10-2025 | 20:35