உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஜப்பானில் முதல் ஏவுகணை சோதனை: கிழக்கு ஆசிய நாடான ஜப்பான், போதிய நிலப்பரப்பு இல்லாத காரணம் மற்றும் பாதுகாப்புக்காக, அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தே இதுவரை ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. முதன்முறையாக, நேற்று தங்கள் நாட்டு எல்லைக்குள் இருந்து, நிலத்தில் இருந்து கப்பல்களை தாக்கும் 'டைப் 88' என்ற ஏவுகணையை சோதித்தது. இது கடற்கரையில் இருந்து 40 கி.மீ.,க்கு அப்பால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஆளில்லா படகை துல்லியமாக தாக்கியது. இந்த ஏவுகணை ஜப்பான் எல்லைக்குள் அத்துமீறும் சீன கப்பல்களை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

25-06-2025 | 12:17


மேலும் இன்றைய போட்டோ

தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

01-02-2026 | 17:41


தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

01-02-2026 | 17:40


திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் தைபூசம் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.

01-02-2026 | 17:39


தைப்பூசம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடந்தது.

01-02-2026 | 17:39


தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.

01-02-2026 | 17:38


தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

01-02-2026 | 10:47


பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

01-02-2026 | 10:47


உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நிலவும் கடும் பனிபொழிவால் பத்ரிநாத் கோவில் முழுவதும் வெண் பனியால் போர்த்தப்பட்டு ரம்மியமாக காட்சி அளித்தது.

01-02-2026 | 06:56


கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

01-02-2026 | 06:53