மேலும் இன்றைய போட்டோ
சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்ட முடிவு செய்த போது எத்தனையோ போராட்டங்கள், ஒரு வழியாக மரங்களை பாதுகாக்கும் கோரிக்கையே வென்றது. இந்த சாலையை சூழ்ந்த மரங்கள் மனதுக்கு இதமாக காட்சியளிக்கின்றன. இடம்: பொள்ளாச்சி- ஆனைமலை ரோடு.
10-02-2026 | 09:19
குன்னூர் கிளண்டேல் பகுதியில் காலை நேரத்தில் காணப்பட்ட பனி மூட்டத்தால் கடும் குளிரான காலநிலை நிலவியது.
10-02-2026 | 09:15
அமிர்தாபுரம் ஏரியில் தண்ணீர் இருந்தும், தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு பொக்லைன் மூலம் மண் அள்ளப்படுவதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். இடம்: திருத்தணி.
10-02-2026 | 09:07
தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு மையப்படிகள் சேதம் அடைந்ததால், மீண்டும்நகலெடுக்கும் பணியில் மத்திய தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
10-02-2026 | 09:04
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள சாலைகள் மிகவும் குறுகலானவை. அதன் ஒரு பகுதியாக, வாரணாசியின் முக்கிய வணிகப் பகுதியான தால் மண்டியில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
10-02-2026 | 09:00
மேற்குவங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த என்.சி.சி., மாணவர்களுக்கு கவர்னர் பதக்கங்கள் வழங்கும் விழா கொல்கட்டாவில் உள்ள லோக் பவனில் நடைபெற்றது. இதில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்ற மகிழ்ச்சியில் மாணவ- மாணவியர்.
10-02-2026 | 08:46
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியின் மூலம் அவர்களுடன் பிரதமர் மோடி டில்லியில் கலந்துரையாடினார். மாணவ- மாணவியரின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், தேர்வுகளை ஒரு சுமையாகப் பார்க்காமல் திருவிழாவாக் கொண்டாடுங்கள் என உற்சாகப்படுத்தினார்.
10-02-2026 | 06:22