இன்றைய போட்டோ
காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களின் கண்டு பிடிப்பான கடலில் மூழ்கியவர் எளிதாக தப்பிப்பது எப்படி என்ற கண்டுபிடிப்பான கடல்சார் பாதுகாப்பு இடுப்பு பட்டை கருவிக்கு மாநில அளவில் முதல்பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. இதற்கான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் அன்பரசன் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.
17-07-2025 | 02:34
மேலும் இன்றைய போட்டோ
மழை பெய்து ஓய்ந்த நிலையில், மகிழ்ச்சியில் சிறகு விரிக்கும் புறாக்கள். இடம்: ரேஸ்கோர்ஸ், கோவை.
31-10-2025 | 07:04
கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்தில் சீமை கருவேல மரங்களுக்கு இடையே தேங்கியுள்ள மழைநீர்.
31-10-2025 | 07:01
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு பிறகு பசுமைக்கு மாறிய வனம் சூழ்ந்த, மலைகளின் நடுவே அருவியில் வரும் வெள்ளம் வெள்ளி கீற்றாக காட்சியளிப்பது, சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. இடம்: குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதை எதிரே உள்ள பகாசூரன் மலை.
31-10-2025 | 06:59
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அரசு கொள்முதல் செய்து அடுக்கி வைத்துள்ள பல நெல் மூட்டைகள் நனைந்து முளைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளதை, புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் ஆய்வு செய்தார்.
31-10-2025 | 06:54
ராமாயணத்தில் ராமர் நடந்த பாதையை நினைவு கூரும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை அயோத்தியில் இருந்து 42 கி.மீ., தூரத்துக்கு ஒரு நாள் புனித யாத்திரை நடக்கும். யாத்திரையில், ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டபடி பக்தி பரவசத்துடன் சென்ற பக்தர்கள்.
31-10-2025 | 06:49