இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கர்நாடக மாநிலம் ஷிவமொகா மாவட்டம் சோரப் தாலுகாவில் உள்ள சித்தூரில் ஏரி வேட்டை எனப்படும் பாரம்பரிய கருவிகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் நிகழ்வான கெரே பேட்டே திருவிழாவில் ஆர்வத்துடன் மீன் பிடித்த மக்கள்.
08-05-2026 | 07:14
நாகலாந்து மாநில கவர்னர் நந்த் கிஷோர் யாதவ், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அருகில் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
08-05-2026 | 07:05
ஊட்டி தாவரவியல் பூங்காவில் , பூத்து குலுங்கும் மெரிகோல்டு மலர்களை கண்டு ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
07-05-2026 | 14:58
விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு இடதுசாரிகள் மற்றும் வி.சி., கட்சி இணைந்து சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
07-05-2026 | 14:57
கோவை வனக்கல்லூரி வளாக சுற்றுச்சுவர் வெளிப்புறத்தில் வரையப்படும் நம் மாநிலத்தைச் சேர்ந்த பறவைகள்.
07-05-2026 | 14:57
தென்மேற்கு பருவமழை சற்று முன்னரே பெய்யும் என்று சொன்னார்கள்… மகிழ்வோடு இன்று வரும், நாளை வரும் என்று காத்திருந்து, காய்ந்து போன குளத்துக்கு கடைசி சாட்சி இந்த மீன்! இடம்: கோவை, நாகராஜபுரம் நரசாம்பதி குளம்
07-05-2026 | 07:40
நம் அண்டை நாடான சீனாவின் போக்குவரத்தில் சைக்கிளுக்கு பெரும் பங்கு உண்டு. இதற்காக அமைக்கப்பட்டுள்ள நிறுத்தங்களில் இருந்து மொபைல் போனில் ஸ்கேன் செய்து சைக்கிள்களை எடுத்து செல்லலாம். இவ்வாறு எடுத்து செல்லப்பட்டு, பஸ் ஸ்டாண்ட், மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் சைக்கிள்களை சேகரித்து செல்லும் ஊழியர்கள். இடம்: பீஜிங்
07-05-2026 | 07:30
ஒடிஷாவின் புரி ஜகந்நாதர் கோவில் தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய தேர் மற்றும் சக்கரங்கள் உருவாக்கப்படும். இந்த ஆண்டு ஜூன் 16ல் நடக்க உள்ள தேரோட்டத்திற்கான சக்கரங்களை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரும்பு ஆணிகள் பயன்படுத்தாமல் மரக்கட்டைகளைக் கொண்டே இவை இணைக்கப்படுவது பொறியியல் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
07-05-2026 | 06:57