இன்றைய போட்டோ
சென்னை நந்திகேஸ்வரர் தாள வித்யாலயா அமைப்பின் 30ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இதில், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபை செயலர் ரகுநாதன், இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று, இசை கலைஞர்களை கவுரவித்தனர். இடமிருந்து: இசைக் கலைஞர்கள் 'நாதப்ரம்மம்' சுப்ரமணியன், ஏ.வி.மணிகண்டன், வயலின் வித்வான் பத்ரி நாராயணன், நந்திகேஸ்வரர் தாள வித்யாலயா நிறுவனர் தில்லைஸ்தானம், டாக்டர் சூரிய நாராயணன் மற்றும் தலைவர் மணிசங்கர் ராமசாமி. இடம்: காமாட்சி கல்யாண மண்டபம், குரோம்பேட்டை.
21-07-2025 | 04:30
மேலும் இன்றைய போட்டோ
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மெய்டி சமூகத்தினர் சைரோபா எனப்படும் புத்தாண்டை கொண்டாடினர். இதையொட்டி இம்பாலில் உள்ள ஒரு வீட்டில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பாரம்பரிய உணவுகளை வாழை இலையில் வைத்து வழிபட்டனர். மெய்டி-கூகி பழங்குடியினர் மோதலால் வன்முறைக் காடான மணிப்பூரில் பண்டிகைகளை கொண்டாடும் அளவுக்கு நிலைமை சீரடைந்துள்ளது.
20-03-2026 | 09:19
ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெற உள்ள எம்பிக்கள், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய நிதியமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
20-03-2026 | 09:12
சட்டசபை தேர்தலை ஒட்டி, மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு பேரணி நடத்தினர். இடம்: ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர்.
20-03-2026 | 09:04
சட்டசபை தேர்தலை முன்னிட்டு கட்சியின் கொடி மற்றும் கட்சித் தலைவர்கள் உருவம் பொறித்த மாதிரி பண மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. தலைவர்களின் புகைப்படங்களுடன் கிரீடங்கள். இடம்: திருவொற்றியூர்.
20-03-2026 | 09:01
அடடே நம்ம தேர்தல் அதிகாரிகளின் கடமையை பாருங்களேன்! தேர்தல் தேதி அறிவித்த பின், பழக்க தோஷத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை மறைத்த அதிகாரிகள் மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டியதில்லை என தேர்தல் கமிஷன் சொன்னதால் திரையை விலக்கினர். ஆனாலும் அவர்கள் கையில் அரசியல் உள்ளது எனக் கூறி அதில் கிளவுஸ் போன்ற துணியால் மறைத்து கடமையாற்றி உள்ளனர். இடம்: கே.கே.நகர், மதுரை.
20-03-2026 | 08:57
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலியில் உள்ள டென்பசார் என்ற இடத்தில் நைபி எனப்படும் அமைதி தினத்திற்கு பிரமாண்ட ஊர்வலம் நடந்தது. உருவ பொம்மைகளை மக்கள் சுமந்து சென்றனர்.
20-03-2026 | 08:43
மேற்காசிய போர் காரணமாக தொழிற்சாலை எரிவாயு மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால், குஜராத்தின் சூரத்தில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ரயில் நிலையத்தில் வரிசையில் காத்திருந்தனர்.
20-03-2026 | 08:28