இன்றைய போட்டோ
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து அர்ச்சகர் சுந்தர் பட்டர், திருச்சி தினமலர் பதிப்பு ஆசிரியர் ராமசுப்பு அவர்களின் மனைவி ரேணுகா ராமசுப்பு,கோயில் அர்ச்சகர்கள், அலுவலர்கள் கொண்டு வந்த பட்டு, மங்களப் பொருட்களை ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள், கோயில் பட்டார்கள் பெற்றுக் கொண்டனர்.
27-07-2025 | 19:16
மேலும் இன்றைய போட்டோ
மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட லட்சுமி சிலையை வாங்கி சென்ற இளம்பெண். இடம்: நாடியா, மேற்குவங்கம்.
06-10-2025 | 08:40
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில், மழை நீர் வடிகால்வாயில் செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக வடிகால்வாய் சீரமைக்கப்பட்டு உள்ளது.
06-10-2025 | 08:39
தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பிய நிலையில் குரோம் பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
06-10-2025 | 08:39
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளுக்கு எனக் கூறி, அதிக பரப்பு மற்றும் ஆழத்தில் மண் எடுக்கப்பட்டடுள்ளதால் பிரம்மாண்ட பள்ளங்கள் ஏற்பட்டுள்ள காஞ்சிபுரம் உள்ளாவூர் சிற்றேரி.
06-10-2025 | 08:39
சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் இரை தேடி வரிசையாக அமர்ந்திருக்கும் நீர் காகங்கள்.இடம் : சோழிங்கநல்லூர்.
06-10-2025 | 06:02
தொடர்ந்து பெய்த மழையோடு, நிலத்தடி நீரும் கைகொடுக்க பச்சைக்கம்பளம் விரித்தாற் போன்று பரந்து காணப்படும் நெல் வயல்கள். இடம்: மதுரை அருகே அய்யர் புதூர்.
05-10-2025 | 19:44