இன்றைய போட்டோ
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள காஞ்சி மடத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 120 வேத பண்டிதர்கள் பங்கேற்ற, விஸ்வாவசு சாதுர்மாஸ்ய அக்னிஹோத்ர சதஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று, காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றார். பின், வேத பண்டிதர்களை கவுரவித்தார். நிகழ்ச்சியை பால பெரியவரும் கலந்து கொண்டார்.
03-08-2025 | 00:49
மேலும் இன்றைய போட்டோ
சென்னையில் பெய்து வரும் மழையால் திருமங்கலம் முதல் அம்பத்தூர் எஸ்டேட் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்.
28-10-2025 | 10:45
புயல் கரையை கடக்க உள்ள நிலையில் வானிலை மாற்றத்தால் கடலில் எழுந்த ராட்சத அலைகள். இடம்: பெசன்ட் நகர்.
28-10-2025 | 10:45
மோந்தா புயல் காரணமாக, சென்னையில் பரவலாக மழை பெய்தது. இடம். காமராஜர் சாலை, மெரினா..
28-10-2025 | 10:44
மோந்தா புயல் எதிரொலியாக, சென்னை மெரினா சீனிவாசபுரம் கடற்கரையில் வரிசையாக நிற்கும் மீன்பிடி படகுகள்.
28-10-2025 | 10:43
சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இடம்: அகர்தலா, திரிபுரா.
28-10-2025 | 07:34
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சுப்பிரமணியசுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.
28-10-2025 | 07:17
கிழக்கு ஆப்ரிக்க நாடான சீஷெல்சின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேட்ரிக் ஹெர்மினியை, அவரது இல்லத்தில் நம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
28-10-2025 | 06:45